Tuesday, 9 February 2010

நதியா நெத்தியும் அமலா மூக்கும்


டீனேஜ்ல என்ன பண்ணியிருக்கோம்னு யோசிச்சதில் நமக்கு அப்படி எக்சைட்டிங்கா ஒண்ணுமே இல்லாம போயிடுச்சு. வாழ்க்கைல எம்புட்டு மிஸ் பண்ணியிருக்கேன். ஏன் மிஸ் பண்ணினேன்னு யோசிச்சேன். நான் ரொம்ப சுமாரான மொக்கை பிகராய் இருந்ததாலும், கூட படிச்ச, பழகிய பொண்ணுங்க எல்லாரும் என்னைவிட சூப்பர் பிகராய் இருந்ததாலும், பெரும்பாலும் என் ஆண் நண்பர்கள் எனக்கு தம்பியாய் இருந்ததாலுமோ என்னவோ எனக்கு ஒரு லவ் லெட்டரும் வரலை. லொடுக்கு சுந்தரி ஸ்டெட்டஸ்தான் கிடைச்சுது. (அப்படின்னா என்னான்னு தெரியாதவங்க யாராச்சும் இருக்கீங்களா?)

ஒன்பதாவது படிக்கும்போது ப்ரின்ஸின்னு ஒரு பொண்ணு. 'நதியா மாதிரி அவளுக்கு நெத்திடி' என்று மற்ற பெண்கள் அவளை கிட்டத்தட்ட ஒரு செலிப்ரட்டி ரேஞ்சுக்கு கொண்டு போயிட்டாங்க. (நதியா மாதிரி நெத்தி, அமலா மாதிரி மூக்கு இதெல்லாம் இருக்க பொண்ணுங்கன்னா அவங்களுக்கு கொம்பு முளைச்சிருக்கும்). ஒரு சிலர் அவளுக்கு சாக்லேட் வாங்கிக்குடுத்து பிரெண்ட் ஆக்கிக்குவாங்க. அப்பறம் ஒரு சிலர் 'ஏய் அவ கெட்ட பொண்ணுடி, அவ யாரையோ லவ் பண்ணறாளாம். காந்தி பார்க்ல ஒரு ஆட்டோ டிரைவராம். அவ கூட வச்சிக்காத' என்று சிலருக்கு அட்வைஸ் கிடைக்கும். அப்பறம் நான் கல்லூரி படிக்கும்போது அந்த ஆட்டோ டிரைவரையே அவள் கல்யாணம் பண்ணிக்கிட்டதும் நடந்தது.

என் ஸ்கூலுக்கு அருகிலேயே பாய்ஸ் ஸ்கூலும் உண்டு. எங்கள் ஊரிலிருந்து பசங்களும் பெண்களுமாய் ஒரு பத்து பதினைந்து பேர் ஒரே பஸ்ஸில் போவோம். அக்பர் என்று ஒரு பக்கத்து வீட்டுப்பையன். பத்தாவதில் ரெண்டு தரம் பெயிலாகி பதினொண்ணாவது கஷ்டப்பட்டு படித்துக்கொண்டிருந்தான். எங்களை ஓட்டுவதாக நினைத்துக்கொண்டு ' உங்க மிஸ் எல்லாரையும் எனக்குத்தெரியும். போட்டுக்குடுத்துருவேன்' என்பான். நாங்கெல்லாம், 'வேறொண்ணுமில்லை. இவன் கூடப்படிச்சவங்க எல்லாம் டீச்சராகிட்டாங்க, இவந்தான் இன்னும் ஸ்கூலே முடிக்காம இருக்கான்' என்று கலாய்ப்பதுண்டு. எங்க பஸ் கூட்டத்தில யாரும் யாரையும் லவ் பண்ணின மாதிரி தெரியலை. நல்ல ப்ரெண்ட்ஷிப் இருந்தது எல்லாருக்கும். காலையும் மாலையும் பஸ்ஸில் போவதே ஜாலியாய் இருக்கும்.

அப்பறம் காலேஜ் படிக்கும்போது என் தோழி கொஞ்சம் குண்டாய் பார்க்க நன்றாக இருப்பாள். அதனால் அவளுக்கு கல்லூரியில் குஷ்பூ என்று பெயர். அவள் பக்கத்தில் கொத்தவரங்காய் மாதிரி நான் ஒல்லியாய் இருப்பேன். அப்பெல்லாம் குஷ்பூ அலை. அவளுக்குதான் நிறைய விசிறிகள் கல்லூரியில். ப்ரின்ஸிக்கு இருந்த மாதிரி பெண் ரசிகைகள் அவளுக்கு குறைவு. பசங்கதான் நிறைய - For obvious reasons :).


அப்பறம் சில கிசுகிசு வரும். ரோஜர் அண்ணாவும் சுரையா அக்காவும் பிரிஞ்சிட்டாங்களாம். சுரையா அக்காவோட அப்பா முஸ்லிம் அம்மா இந்து. ஆனா சுரையா அக்கா வீட்ல எல்லாருக்கு இந்து மாப்பிள்ளை / பொண்ணுதான் கல்யாணம் பண்ணி வைக்கப்போறாங்களாம் என்று காத்துவாக்கில் சேதி வரும். ரோஜர் அண்ணாவும் ஜெண்டில்மேனாக எங்கிருந்தாலும் வாழ்கன்னு சொல்லிட்டு வேற ஊருக்கு போயிட்டார். நான் அவரை அதுக்கப்பறம் பார்த்ததில்லை. அப்பறம் மாலதி அக்கா/சாதிக் அண்ணா மாதிரி சின்சியரா லவ் பண்ணறவங்களைப்பாத்து பின்னாள்ல யாரையாச்சும் லவ் பண்ணியிருக்கலாமேன்னு தோணும்.

என் அம்மா அப்பா எல்லாம் முல்லை ஆயா மாதிரி சந்தேகப்பட்டாங்களான்னு தெரியாது. ஆனால் நான், என் அக்கா, நண்பர்கள் எல்லாம் லவ் பெரிய கெட்ட வார்த்தை என்கிற ரேஞ்சுக்குதான் நினைத்துக்கொண்டிருந்ததாக ஞாபகம். நான் வேலைக்குப்போகும்போது தான் அப்பா அம்மா லவ் மேரேஜ் என்று அப்பா ஒருநாள் சொன்னார். அம்மாவின் தாய்மாமன் மகன் தான் அப்பா. அம்மா ப்ரொப்போஸ் பண்ணிதான் கல்யாணமே பண்ணிக்கிட்டாங்கன்னும் ரொம்ப லேட்டா சொன்னார். அந்தந்த வயசில தெரிஞ்சிருந்தா எவ்வளவோ சாதிச்சிருக்கலாம்.


சந்தனமுல்லை டீனேஜ் கொசுவத்தி சுத்த சொல்லீட்டாங்க. அதோட விளைவு தான் இந்தப்பதிவு. அமிர்தவர்ஷினி அம்மா, கோபிநாத், தீபா , முகிலன் ,ஆதிமூலகிருஷ்ணன், வானவில்வீதி கார்த்திக், நான் ஆதவன், கணேஷ் இன்னும் யாருக்காவது தொடர விருப்பமிருந்தால் தொடருங்கள்.

Friday, 5 February 2010

Coffee Prince

மிஸ்டர் A அமெரிக்காவில் படித்துவிட்டு பாட்டியின் அழைப்பின் பேரில் வீடு திரும்பவேண்டிய நிலைமை. மிஸ்டர் A வின் பாட்டி பெரிய தொழிலதிபர். மிஸ்டர் A வுக்கு அமெரிக்காவில் பொம்மைகள் வடிவமைக்கும் வேலை கிடைக்கிறது. பாட்டியோ அமெரிக்காவை விட்டுவிட்டு சொந்த பிஸினஸ் ஒன்று ஆரம்பிக்கும்படி வற்புறுத்துகிறார். காஃபி பிரின்ஸ் என்ற காபிஷாப் ஆரம்பித்து நடத்தும்படி சொல்கிறார்.

மிஸ் B யின் வாழ்க்கை கொஞ்சம் கடினமானதாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. அப்பா இறந்துபோனதிலிருந்து , வீடுகளுக்கு பால் போடுதல், பிஸ்ஸா டெலிவரி, பொம்மைகள் செய்வது போன்ற வேலைகள் செய்து அம்மாவையும், படிக்கும் தங்கையையும் காப்பாற்றுகிறாள். கடினமாக உழைக்கிறாள். அவளை பெரும்பாலும் பையன் என்றே தவறாக நினைக்கிறார்கள். அவள் உடலமைப்பும் அவ்வாறே இருக்கிறது.

மிஸ்டர் A வின் பாட்டி, அவனை ஊரிலேயே தங்கவைப்பதற்காக திருமணம் செய்து வைக்க எண்ணுகிறாள். நிறைய பெண்களை சந்திக்க வைக்கிறாள். எதேச்சையாக மிஸ் Bயை சந்திக்கிறான் மிஸ்டர் A. பையன் என்றே அவனும் தவறாக நினைத்துக்கொள்கிறன். பாட்டியின் திட்டத்திலிருந்து தப்பிக்க மிஸ் B யை உபயோகித்துக்கொள்ள நினைக்கிறான். இருவரும் Gay Couple போல் அந்தப்பெண்களின் முன் நடித்து தப்பிக்கிறான்.


பாட்டிக்கு ஸ்டமக் கேன்ஸர் என்றும் அதனால்தான் தன்னை அமெரிக்காவை விட்டு வரும்படி சொன்னார் என்று தெரிகிறது. அதனால் காபிஷாப்பை நடத்த திட்டமிடுகிறான் மிஸ்டர் A. காபிஷாப்புக்கு முழுக்க ஆண் வேலையாட்களையே அமர்த்த முடிவு செய்கிறான். மிஸ் B யும் பையன் என்று பொய் சொல்லி வேலையில் சேருகிறாள். ஆனால் அவள் மீது ஏதோ ஒரு ஈர்ப்பு அவனுக்கு. மிஸ் B யை காதலிக்க ஆரம்பிக்கிறான். ஆனால் அவள்தான் ஆண் ஆயிற்றே. தான் நிறமாகவே Gay ஆகிவிட்டோமோ என்று மனநோய் மருத்துவரிடம் கூட போகிறான்.


மிஸ்டர் C ,மிஸ்டர் Aவின் கஸின். பக்கா ஜெண்டில்மேன். உறவை முறித்துக்கொண்டுபோன காதலி திரும்ப ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டு வருகிறாள். மிஸ்டர் C க்கு மிஸ் B பெண் என்று தெரிகிறது. அவளை பிடித்தும் இருக்கிறது. மிஸ் B யை விரும்புகிறார். மிஸ் B யோ முதலாளியான மிஸ்டர் A வை விரும்புகிறாள்.

மிஸ்டர் A வுக்கு தான் ஒரு Gay என்று ஒத்துக்கொள்ள மனமில்லை. அதனால் மிஸ் B யை எப்போதும் திட்டிக்கொண்டே அவமதித்துக்கொண்டே இருக்கிறான். ஒரு கட்டத்தில் தான் பெண் என்று மிஸ் B சொல்ல நினைக்கும்போது, மிஸ்டர் A தத்துப்பிள்ளை என்று தெரியவந்ததாக சொல்லி மனவருத்தத்திலிருக்கிறான். அவளால் தான் பெண் என்பதை சொல்லமுடியாமல் போகிறது. பின்னால் அவனுக்கு தெரியவரும்போது இருவருக்கும் பெரிய சண்டை நிகழ்கிறது.

மிஸ் B யாரை திருமணம் செய்துகொள்வாள். மிஸ்டர் A வையா, மிஸ்டர் C யையா ? கம்ப்யூட்டர் திரையில் காணுங்கள்.



Coffee Prince சமீபத்தில் நான் பார்த்து ரசித்த கொரிய தொலைக்காட்சித்தொடர். கொரியத்திரைப்படங்கள் போலவே தொலைக்காட்சித்தொடர்களும் ரசிக்கத்தக்கவை. இது ஒரு அழகான காதல் கதை. பதினேழு எபிசோட். யூ ட்யூபில் காணக்கிடைக்கிறது. சின்னச்சின்ன குறைகள் இருந்தாலும் விறுவிறுப்பாக அடுத்தது என்ன என்று உங்களைப்பார்க்கவைக்கிறார்கள். இதில் எனக்கு மிகவும் பிடித்தது கேரக்டரைசேஷன். ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் அழகாக வடிவமைத்து இருக்கிறார்கள். கதாநாயகியின் தங்கை, அவளை ஏஞ்சல் என்று அழைத்துக்கொண்டு காதலிக்கும் காபி பிரின்ஸ் தொழிலாளி, கதாநாயகியின் அம்மா, மிஸ்டர் A வின் அம்மா, அப்பா, பாட்டி , கதாநாயகியின் அம்மாவுக்கு ரூட் விடும் பக்கத்து தெரு கசாப்புக்கடைக்காரர். அவருக்கு போட்டியாய் காபி பிரின்ஸின் மேனேஜர் - இப்படி. இந்ததொடர் முழுக்க காதலும் காமெடியும்தான்.

சிலசமயம் ஆங்கில மொழிபெயர்ப்புகள் நீங்கள் படிப்பதற்குள் வேகமாக ஓடும். அதையெல்லாம் மீறி உங்களைப்பார்க்கவைக்கும் இந்தத்தொலைக்காட்சித்தொடர். தவறவிடாதீர்கள்.

ஆறாம் வாரத்தின் இந்தப்பத்து நிமிடங்களைப்பாருங்கள்.











கதாநாயகன் தான் Gay இல்லையென்று தனக்குதானே நம்பிக்கையூட்ட பெண் தோழியை Hug பண்ணி உறுதிசெய்துகொள்வது, மிஸ்டர் A, மிஸ் B இருவரும் சண்டைபோட்டுக்கொள்வது என்று அழகாய் எடுத்திருக்கிறார்கள்.


Monday, 1 February 2010

இந்தப்பாட்டு எங்கியோ கேட்ட மாதிரி இருக்கே.


தைப்பூசத்தன்னிக்கு மெல்பர்ன்ல இருக்க சிவா விஷ்ணு கோயிலுக்கு போயிருந்தேன். காவடி, பால்குடம் எல்லாம் இருந்துது. தவில், நாயனமெல்லாம் காவடிக்காக வாசிச்சாங்க. ஒரு அம்மா தீச்சட்டி கூட எடுத்துட்டு வந்தாங்க. (யாராவது அலகு குத்துவாங்களான்னு பாத்தேன். ம்ஹீம்) நிறைய மலேசிய, சிங்கப்பூர் தமிழர்கள்தான் இதை இன்னும் செய்துட்டு வர்றாங்க. நாங்க கோயிலுக்குள்ள சாமி கும்பிட்டுட்டு வெளியே வர்றோம். அப்பதான் அந்தப்பாட்டு கேட்டது. இத எங்கியோ கேட்டிருக்கனேன்னு யோசிச்சா அது " கரிகாலன் காலப்போல கருத்திருக்குது குழலு" பாட்டு. காவடி ஆட பாட்டுக்கு பஞ்சம் வந்துருச்சுன்னு சொல்லிக்கிட்டே ரங்க்ஸ்கிட்ட இது வேட்டைக்காரன் படப்பாட்டுன்னு அறிமுகப்படுத்தினேன். :)
நாதஸ்வரம் தவிலோட கேக்க பாட்டு நல்லாத்தான் இருந்துது.

***************

வெலிங்டன்ல இருந்து வந்திருந்த ஒரு நண்பர்கிட்ட பேசிட்டு இருந்தப்ப சொன்னார். அய்யப்பன் முருகனுக்கு தம்பி ஆன கதை தெரியுமான்னாரு. தெரியாதே சொல்லுங்கன்னு கேட்டேன். வெலிங்டன் முருகன் கோயிலுக்கு குறிஞ்சிக்குமரன் கோயில்னு பேர்.

அய்யப்பன் பூசை எல்லாம் இப்ப கோயில்ல நடக்குதாம். ஒருத்தர் ஆர்வக்கோளாருல சாமியே சரணம் ஐய்யப்பான்னு அந்த வகையறாக்களை கோஷம் போட்டுக்கிட்டே இருப்பாராம். அவர்கிட்ட அய்யப்பன் பிறந்த கதையை யாரோ சொல்ல, ஒரு நாள்
'குறிஞ்சிக்குமரன் தம்பியே'ன்னு சவுண்டு விட சிலர் இது என்னடா புதுசா இருக்கேன்னு யோசிச்சாலும் வழக்கம்போல 'சரணம் அய்யப்பா ' ன்னு பின்பாட்டு பாடி அய்யப்பனை சைவராக்கிட்டாங்க. :)

********

ஆண்டவன் வந்தான்
கதையை யார்மொழிபெயர்த்தாங்கன்னு தெரியலைன்னு சொல்லியிருந்தேன். இப்ப தெரிஞ்சிடுச்சு. அவர் பெயர் எம்.வி.வெங்கட்ராம் . விக்கில ஆங்கிலத்துல இருந்து நிறைய மொழிபெயர்த்து இருக்கார்னு மட்டும்தான் இருக்கு. அது என்ன கதைகள்னு இல்லை. சாகித்ய அகாடமி பரிசு பெற்றவர். திண்ணைல வந்த இந்தக்கதை படிங்க.

Wednesday, 20 January 2010

ஆண்டவன் வந்தான்

இந்தக்கதையை தமிழ்நாட்டில் எத்தனைபேர் படிச்சிருப்பாங்கன்னு தெரியலை. ஆதி என்கிட்ட நாலு கேள்வி கேட்டப்பயே இது பத்தி எழுதணும்னு நினைச்சேன். (நாலாவது கேள்விக்கு மொக்கையா பதில் சொல்லியிருந்தேன். ஆனா அவர் எடிட் பண்ணிட்டாரு. நானும் ஏன்னு கேக்கலை )

SHE என்ற ஆங்கில நாவலை ஆண்டவன் வந்தான் என்ற பெயரில் மொழிபெயர்த்திருந்தாங்க யாரோ ஒருத்தர். யாருன்னு ஞாபகம் இல்லை. ஆண்டவன் வந்தான் புத்தகம் அப்பாவுக்கு யாரோ படிக்க குடுத்திருந்தாங்க. நானும் படித்தேன். ஒரு பதினைஞ்சு வருஷம் இருக்கும். இரண்டாம் முறை வாசிக்க இன்னும் கொடுத்து வைக்கவில்லை.

ஹோரேஸ் ஹோலி ,கேம்ப்ரிட்ஜ் ப்ரொபசர், ஒரு இண்டெலெக்சுவல் ஆசாமி. ஹீப்ரூ, லத்தின் போன்ற பழங்கால மொழிகள் ஓரளவு அறிந்தவர். அவர் வளர்ப்பு மகனின் காலம் சென்ற அப்பா ஹோலிக்கு நெருங்கிய நண்பர். அவர் சில கடிதங்களையும் பானைச்சில்லுகளையும் லியோ பெரியவனானதும் அவனிடம் தரச்சொல்லிவிட்டுப்போயிருப்பார். அதிலிருக்கும் சில தடயங்களை வைத்து ஆப்பிரிக்க காடுகளுக்கு போக முடிவு செய்கிறார்கள் இருவரும்.

காடுகளில் கொசுக்கடியில் லியோவுக்கு மலேரியா வந்துவிடுகிறது. சேற்றுப்புதைகுழிகளில் மாட்டிக்கொள்கிறார்கள். ஒரு ஆப்பிரிக்க கூட்டம் வந்து அவர்களை கைது செய்து அவர்களின் தலைவியிடம் அழைத்துச்செல்கிறது. தலைவி வெள்ளைநிற பர்தா உடையால் முகம் கூட காட்டாமல் தான் எல்லாருடனும் பேசுகிறாள். தன் சொல் கேளாதவர்களை இரக்கமின்றி தண்டிக்கிறாள். அவள் அளிக்கும் தண்டனைகள் எல்லாம் கடுமையாக இருக்கின்றன. அவளைப்பார்த்து எல்லாரும் நடுங்குகிறார்கள். அவளுக்கு சில மந்திர சக்திகளும் இருக்கின்றன. பிடிக்காதவர்கள் மேல் கைவைத்தால் அவர்கள் பனிக்கட்டி போல் உறைந்துவிடுகிறார்கள். தலைமேல் விரல் பதித்தால் ஷாக்கடித்ததுபோல் இறந்துவிடுகிறார்கள். ( "She who must be obeyed" வாக்கியம் இந்த நாவல் மூலம் பிரபலமாயிற்றாம்.)

ஹொரேஸ் ஹோலியிடம் ஹீப்ரு பேசுகிறாள். ஹோலி தன் மகனுக்கு காய்ச்சல் வந்திருப்பதை சொல்லி வருத்தப்படும்போது அவனுக்கு மருத்துவ உதவி அளித்து காப்பாற்றுகிறாள். அப்போது லியோவைப்பார்த்து அவள் ஆச்சர்யமடைகிறாள். தன் பெயர் ஆயேஷா என்று சொல்கிறாள்.

லியோ அந்தக்கூட்டத்தில் இருக்கும் உஸ்தேன் என்ற பெண்ணைக்காதலித்து மனைவியாக்கிக்கொள்ள முடிவு செய்கிறான். இதைக்கேட்ட ஆயேஷா, நீ என்னைத்தான் மணக்கவேண்டும் என்றும் கூறுகிறாள். லியோ-உஸ்தேன் காதலை கடுமையாக நிராகரிக்கிறாள். எதிர்த்துப்பேசிய உஸ்தேனின் தலை மேல் விரல் பதித்துக்கொல்கிறாள் . கிர்ரென்று சுற்றி கீழே விழுந்து இறந்து போகிறாள் உஸ்தேன்.

ஆயேஷா தன் முகத்தை ஹோலிக்கும், லியோவுக்கும் காட்டுகிறாள். மிகவும் அழகான பெண். அவள் அழகில் மயங்காதவர்கள் யாரும் இருக்கமுடியாது. அதனால்தான் அந்த காட்டுவாசிகளிடம் முக்காடு போட்டுக்கொண்டு இருப்பதாகக்கூறுவாள். முதலில் ஆயேஷாவை வெறுக்கும் லியோ, வேறு வழியில்லாததால் ஆயேஷாவைக்காதலிப்பதாகக்கூறுகிறான். யூதர்கள் ஒரு இறைத்தூதர் வருவார் என்று சொல்லிக்கொண்டிருந்தார்களே, அவர் வந்தாரா என்று ஹோலியிடம் ஆயேஷா கேட்கிறாள். அப்போதுதான் அவள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்துகொண்டிருப்பது தெரிகிறது.

லியோவின் முன்னோரான காலிக்ரடிஸ்தான் அவள் விரும்பிய காதலன். இருவரும் அச்சு அசலாக ஒரே மாதிரி இருப்பதாக சொல்கிறாள். இப்போது லியோ வடிவில் திரும்ப வந்திருப்பதாக நம்புகிறாள். காலிக்ரடிஸ்ஸாக இருக்கும் போதும் உஸ்தேன் மாதிரியே இருக்கும் ஒரு பெண்ணை அவன் மணந்திருந்ததால் அவனுடன் நடந்த சண்டையில் காலிக்ரடிஸ் இறந்து போனதாகவும் என்றாவது ஒருநாள் திரும்பி வருவான் என்ற நம்பிக்கையில் ஆயேஷாவின் காத்திருப்பு வீணாகவில்லை என்றும் கூறுகிறாள்.

அவளைப்போலவே சாவு தீண்டாமலிருக்கவேண்டும் என்று ஹோலியையும், லியோவையும் ஒரு மலைக்கு அழைத்துச்செல்கிறாள். அங்கே ஒரு பெரிய ஜோதிஸ்தம்பம் ரோஜா நிறத்தில் ஒளிர்கிறது. நேர்கோட்டில் வந்து வந்து போகிறது. அதில் குளித்ததால்தான் தான் சாவை வென்றேன் என்கிறாள். லியோவோ பயப்படுகிறான். சரி நான் குளித்துக்காட்டுகிறேன், அப்போதாவது நம்புங்கள் என்று சொல்லிவிட்டு அதில் குளிக்கிறாள். எதிர்பாராமல் சில நிமிடங்களில் அவள் உடல் சுருங்கி முடி உதிர்ந்து சிறிய குரங்கு போல் ஆகிறாள். எத்தனை வருடங்கள் வாழ்ந்தாளோ அத்தனை சுருக்கங்கள் அவள் உடலில் இருப்பதுபோல் தோன்றுகிறது. அப்போதுதான் அதில் ஒருமுறைதான் குளிக்கமுடியும் என்று தெரிகிறது. இயற்கையை வெல்ல நினைத்து தோற்றுவிட்டதை உணர்ந்து, லியோவிடம் ஜ்யோதிஸ்தம்பத்தில் குளித்துவிட்டு தனக்காக காத்திருக்குமாறு கெஞ்சி இறந்து போகிறாள்.

ஆனால் அவளைப்போல் இரண்டாயிரம் வருடங்கள் தன்னால் காத்திருக்க முடியாது என்று லியோ குளிக்காமல் ஹோலியுடன் இங்கிலாந்து திரும்பிவிடுவதாக முடியும். இந்தக்கதைக்கு அக்கா,தங்கச்சிக்கதைகள் எல்லாம் வந்துவிட்டன. Fantasy, Imaginative Literature னு எல்லா வகையிலும் பாராட்டப்படுகிறது இந்தக்கதை. ஆங்கிலமோ, தமிழோ மீண்டும் படிக்க காத்திருக்கிறேன் ஆயேஷா மாதிரியே.

Monday, 18 January 2010

I dreamed a dream

திறமை மட்டும் போதாது, அதிர்ஷ்டமும் வேண்டும் வாழ்க்கையில் பிரகாசிக்க. அற்புதமான குரல் வளம் கொண்ட ஸ்காட்லந்தைச்சேர்ந்த சூசன் பாய்ல் மீது உலகத்தின் கண்கள் படும்போது அவருக்கு வயது 47. என்ன அழகாய்ப்பாடுகிறார். பிரிட்டனின் திறன் தேடலில்(2009) இவர் முதலில் பாட வந்தபோது நடுவர்கள் உட்பட இந்தம்மா என்னத்தை பாடி கிழிக்கப்போகுது ரேஞ்சில் நினைத்துக்கொண்டிருந்தார்கள். பாடத்தொடங்கியதும் வாய்பிளந்து, புருவங்கள் மேலேற ரசிக்க ஆரம்பிக்கிறார்கள் பாருங்கள்.

Then I was young and unafraid
And dreams were made and used and wasted

நமக்கும் இளவயதுக்கனவுகள் பல நிறைவேறாமல் போயிருக்கலாம். அதை நாம் மறந்தும் போயிருக்கலாம். அக்கனவு என்றாவது ஒருநாள் நிறைவேறக்கூடும் என்பதற்கு இவர் சாட்சி. இப்போது சூசன் பாய்ல் சொந்தமாக பாடி ஒரு ஆல்பம் ரிலீஸாகி விட்டது. பிரிட்டனின் திறன் தேடலில் இவருக்கு இரண்டாம் இடம்தான். ஆனாலும் அந்த முதல் Performance -ல் எல்லாரையும் மூக்கில் விரல் வைக்கவைத்து ஜெயித்து விட்டார். முதலிடம் வந்தவர்களைப்பற்றி இப்போது பேச்சே இல்லை. இவரைப்பற்றி இன்னும் எல்லாரும் சிலாகித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

கீழே இருப்பது Musical Version by Ruthie Henshall.




*************

அவதார் பார்க்க போயிருந்தோம். IMAX ல் பார்க்க முடியவில்லை. VMAX என்று அதற்கு தம்பி தியேட்டரில் 3D ல் பார்த்தோம். $1 க்கு 3D கண்ணாடி நீங்கள் வாங்கிக்கொள்ளவேண்டும். அடுத்த 3D படம் பார்க்க வரும்போது கொண்டு வாருங்கள் என்று நம் தலையில் கட்டிவிட்டார்கள். சூப்பர் படம் . மிகவும் ரசித்தேன். கூட்டம் இருக்காது என்று போனால் திரையிலிருந்து நான்காம் வரிசையில்தான் இடம் இருக்கிறது என்று சொல்லிவிட்டார்கள். இருந்தாலும் விட்டேனா பார் என்று பார்த்து விட்டுதான் வந்தோம். I dont regret watching the movie. Great one.

*********************

ஆயிரத்தில் ஒருவன் பாத்தாச்சு. தப்பிச்சு ஓடிப்போற சோழர்கள் ஏன் பாண்டியர்களோட குலதெய்வச்சிலையை எடுத்துக்கிட்டு ஓடணும். புத்திசாலித்தனமா மாயாஜாலத்தோட 7 Trap வைக்கத்தெரிந்த சோழர்கள் கடைசில அதை உபயோகிச்சு ராணுவத்தோட சண்டை போட்டிருந்தா ஜெயிச்சிருக்கலாமே. அருமையான கதைக்களன் இருக்கு. சுமாரா க்ராபிக்ஸ் எல்லாம் பண்ணியிருக்காங்க. (ஆனா இதுமட்டும் போதுமா ஒரு படம் பிடிக்க) குறிப்பா அந்த பாம்புகள் வர்ற இடம் இண்டியானா ஜோன்ஸ்ல வர்ற மாதிரி அருமையா இருக்கு. அப்பறம் அந்த நடராஜர் நிழல்ல புதைகுழியிலிருந்து தப்பிக்கும் காட்சி சூப்பர். இரண்டாம் பகுதில எல்லாருக்கும் ஒரே ரத்த வெறி. பாக்கமுடியலைங்க.

கார்த்தியை வீணடிச்சுருக்காங்க. பார்த்திபன் தான் ஹீரோ படத்தில். ரீமாசென் நல்லா நடிச்சிருக்காங்க. நிறைய காட்சிகள் கட். இடைவேளையையும் சேத்து இரண்டேமுக்கால் மணிதான் படம். நான் ரொம்பவும் எதிர்பாத்திருந்த இரண்டு பாடல்கள் - மாலைநேரம் பாட்டு படத்துல இல்லவே இல்லை. பாடுவீரோ தேவரே பாட்டு ஒரு ஐந்து வரிகள் தான் இருந்தது.( அதுல தெலுங்கெல்லாம் வந்துச்சு. படத்தில எப்படி லிங்க் பண்றார்னு பாக்கலாம்னு இருந்தேன்). படத்தின் அடுத்த பார்ட் வரும்னு நம்புவோம். அதுவாவது ஏமாற்றாமல் இருக்கட்டும். வாரணம் ஆயிரத்திலும் முடிவுன்னு ஒண்ணும் பெரிசா இல்லை. ஆனா படம் பாத்த திருப்தி இருந்தது.

படம் பாத்துட்டு வெளிய வரும்போது ஏமாற்றம்தான் மிஞ்சியது. படம் இன்னும் பாக்கலைன்னா வருத்தப்படாதீங்க.

*****************

பின்லாடன் ஆப்கானிஸ்தான்ல இருக்கார். ஈராக்ல இருக்கார்னு சொல்லி இப்ப ஸ்பெயின்ல இருக்கார்னு போனவாரம் புரளி. அமெரிக்கா ஸ்பெயின் மேல போர்தொடுக்குமா!!!

Tuesday, 12 January 2010

Out of Sight - Out of Mind


டீவிக்கு முன் டீப்பாயில் இருந்த அது உறுத்திக்கொண்டே இருந்தது. வேண்டாமென்று மறுத்தபோதும் திணிக்கப்பட்டது அந்த பரிசு. பேசாமல் ஏன் வாங்கிக்கொண்டேன். ஒரு மாதமாய் அங்கேதான் இருக்கிறது உறுத்திக்கொண்டே.

வேற எங்காவது எடுத்த வைக்கலாம்? சாப்பாட்டு மேசை மேல் வைத்தேன்.

ஏன் அது உறுத்துகிறது? ஒருவேளை வேறு யாராவது கொடுத்திருந்தால் சந்தோஷமாக வாங்கி வைத்துக்கொண்டிருந்திருப்பேனோ?

எனக்குப்பிடித்தவரை கேலி பேசியதால் பிடிக்காமல் போயிற்றா? இல்லை எனக்கு பிடிக்காதவரை பிடிக்கும் என்று சொன்னதாலா? இனி எனக்கு எதுவும் பரிசு வாங்கிவராதே , நீ சொன்னது எனக்கு பிடிக்கலை ,சொல்லும் தைரியம் எப்போது வரும்.


ரகு வந்ததும் கேட்டான், "ரேவதி, ஏன் இதை இடம் மாத்தி வைச்சிருக்கே. டீவிக்கு முன்னாடிதான இருந்தது?"

"எனக்கு அதை பாக்கும்போதெல்லாம் குடுத்தவங்க ஞாபகம் வருது. தூக்கிக்குப்பைல போடலாமான்னு பாக்கறேன் ரகு"

"உனக்கு நான் ஆசையா வாங்கிக்குடுத்த முத்து மாலையை தொலைச்சிட்ட. இதெல்லாம் பத்திரமா வை"

"நான் என்ன வேணும்னா தொலைச்சேன். வீட்டுக்குள்ள வந்து யாரோ திருடிட்டுபோயிட்டாங்க. பாரு, இதை வைச்சு நமக்குள சண்டை வர ஆரம்பிக்குது. இது வேணாம்" என்று குப்பையில் கடாசினேன்.

வெகுநாட்கள் வரை அது பற்றி மறந்தே போனேன். Out of Sight - Out of Mind. ஒருநாள் ஞாபகம் வந்தபோதும் சந்தோஷமாய் இனி அது ஞாபகத்துக்கு வரவே வராது என்று நினைத்தேன்.

இனி அது ஞாபகத்துக்கு வராது என்று நினைத்தபோது வீட்டுக்கு வந்த தோழி கேட்டாள்.

"ஏய் , வீட்டை ரீடெகரெட் செஞ்சியா? போனதடவை நான் வந்தப்ப இங்க இருந்துச்சே அது எங்கே ?"

யார் சொன்னார்கள் அவுட் ஆப் சைட் அவுட் ஆப் மைண்ட் என்று!!!!!

Wednesday, 6 January 2010

ரங்கமணி கிட்ட கார் ஓட்ட பழகலாமா?

ஒரு நல்ல நாளு எனக்கும் காரோட்டும் ஆசை வந்துச்சுங்க . அப்ப கல்யாணமாகி ஒரு ரெண்டு வருஷம் இருக்கும். சரின்னு ரங்கமணியும் ஒரு நாள் இதுதான் ஸ்டியரிங், இதுதான் ப்ரேக், கேஸ் அப்படின்னு சொல்லி ஆரம்பிச்சாரு. அது வரைக்கும் நல்லாதான் போயிட்டிருந்தது என்னோட கார் ட்ரைவிங்.

அப்பறமாதான் ரங்கமணியோட அன்புத்தொல்லை ஆரம்பிச்சுது.

"ஏன் ரொம்ப ஸ்பீடா போற நீ / ஏன் ரொம்ப ஸ்லோவா போயிட்டிருக்க"


" நீ 40ல போ"

" ஸ்பீட் லிமிட்ல 70 ன்னு போட்டிருக்கு. அதனால 70ல போறேன்"

"40ல போன்னு சொன்னாதான் நீ 70 ல போவ, 70ல போன்னு சொன்னா 100ல போவ"
' நீங்க சொல்லாமயே நான் 70லதான போயிட்டு இருக்கேன்'

இப்படி ஆரம்பிச்சு கடைசீல ஏதாவது சண்டை ல முடியும். அப்பறம் வீட்டுக்கு வந்து ஆளுக்கொரு பக்கம் முறைச்சிக்கிட்டு இருப்போம். இனிய மாலைவேளைகளும் சனி,ஞாயிறுகளும் இப்படி சண்டைல போகவேண்டாம்னு முடிவு பண்ணிக்கிட்டு ஒரு ப்ரொஃபஷனல் ட்ரைவிங் இன்ஸ்டக்டருக்கு போன் பண்ணினதும் ,அவர் என்னோட மதிய சாப்பாட்டு நேரத்தில வந்து எனக்கு ட்ரைவிங் கத்து தர்றதா முடிவாச்சு. அலுவலக வாசல்ல வந்து கூட்டிட்டு போய் சொல்லிக்குடுப்பார். ஒரு க்ளாஸுக்கு $40 டாலர்னு ஞாபகம். அவருக்கு ஒரு $500 டாலர் அழுது Highway ல இருந்து Freeway வரை க்கும் ஓட்டப்பழகியாச்சு.

ஆனாலும் அப்பப்ப கமெண்ட் வந்துக்கிட்டே இருக்கும். நாமும் விடுவமா.

'உனக்கெல்லாம் யாரு லைசன்ஸ் குடுத்தாங்க'

'உங்களுக்கு யாரு கொடுத்தாங்களோ அவங்க ளேதான்'


அதுக்கப்பறம் ட்ரைவிங் பழகணும்னு சொல்றவங்களுக்கெல்லாம் நான் சொல்ற அறிவுரை கொஞ்சம் காசு செலவழிக்க முடிஞ்சா ப்ரொஃபஷனல் ட்ரைவிங் இன்ஸ்ட்ரக்டர் கிட்ட போய் கத்துக்கோங்கன்னுதான். பேர்லல் பார்க்கிங், த்ரீ பாயிண்ட் டர்ன் அப்படீன்ன நல்லாவே சொல்லித்தருவாங்க.

இதனால் சாலைபாதுகாப்பு வாரத்தில நான் உங்க கிட்ட சொல்றதெல்லாம் (நான் ஆதவன் நம்மளை மாட்டி விட்டுருக்காரு)

1. நல்ல Instructor கிட்ட வண்டி ஓட்டப்பழகிக்கோங்க. ரோட் கண்டிஷனுக்கு ஏத்த மாதிரி ஓட்டுங்க. கீழ இருக்க மாதிரி சைன் இருந்தா இலக்கண சுத்தமா இல்லியேனு யோசிக்காம ஓட்டறதுல கவனமா இருங்க.


2. வண்டி ஓட்டறவங்க கிட்ட அப்படி ஓட்டாதே இப்படி ஓட்டாதேன்னு அவங்க கவனத்தை திசை திருப்பாதீங்க.

3. மறக்காம எங்க போனாலும் லைசன்ஸ் எடுத்துக்கிட்டு போங்க

4. Right of way யாருக்குன்னு பாத்து அதுக்கேத்த மாதிரி ஓட்டுங்க.

5. இரண்டு சக்கரவாகனங்கள் ஓட்டறவங்க தலைக்கவசம் போடுங்க.



Safe and Courteos Driving சாலைகளை பயன்படுத்தும் எல்லாருக்கும் நன்மை தரும்.

நானும் யாரையாவது மாட்டி விடணுமாம். வழக்கம்போல நான் கொஞ்சம் ரூல்ஸ் மாத்திருவேன். நீங்கெல்லாம் இந்தத்தொடரை எழுதியே ஆகணும்னு இல்லை. விருப்பமிருந்தால் எழுதுங்க. இது ஒரு அழைப்பு மட்டுமே.

1. சந்தனமுல்லை
2. பிரியமுடன் வசந்த்
3.மோகன்குமார்
4. சுசி
5. கணேஷ்

-------------------------

Facebookல் தோழியர் இரண்டு பேர் What's on your mind பகுதியில் போட்டிருந்தவைகள்.

X is wondering why so many people look so depressed and angry and hostile as they walk down the street?????


Y will have to explain to her autistic boy that some people who claim to be 'normal' are really just a bunch of social retard bullies..